புதன், 2 நவம்பர், 2016

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..!

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..!

ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற முயன்றார்.

உடனே அந்த மனிதர் அவரிடம், ''என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகள் கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம்! என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்'' என்றார்.

அந்த மனிதர் முதல் கேள்வியை கேட்டார்..
''அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?'' என்று கேட்டார்.


இல்லை என பதில் சொன்னார்.

''அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?'' என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

''அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது!

''யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள் என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள். பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்!
உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே  இல்லை...
மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எதுவுமில்லை...!
எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்!
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்!
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்!
மனிதர்கள் இரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும்  உருவாக்கப்பட்டவர்கள்.

 குறையும், நிறையும் உள்ளவனாக தான் இறைவன் மனிதனை படைத்துள்ளான்!  மனிதனின் குறையை மட்டும் பார்க்காதீர்கள்! அவனிடம் இருக்கும் நிரையையும் பாருங்கள்! குறை உங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும்!

கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்கமுடியாது! கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்! வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது நீங்கள் அனுமதித்தால் தவிர. யாரவது  உங்கள் நண்பரைப் பற்றிய  தவறாக கூறினால் , நீங்கள் அனுமதிக்காதீர்கள்! நீங்கள் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் , அவர்கள் உனக்கில் மீது ஏறி சவாரிச் செய்வார்கள்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

welcome to your comments !